ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்
தாண்டிச் சென்றாலென்ன
நீயில்லாத என் வானில்
என்றென்றும் அமாவாசை தான்…
தேய்பிறையாய்த் தேய்ந்து
காணமலே போய்விடுவாய்
என்றறியாது வளர்பிறைக்
கனவுகள் வளர்த்தேன்…
நிலா வந்து போனதற்கு
வான்வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் நீ வந்த சுவடுகள்
நீங்கவில்லை நெஞ்சத்திலே…
பூத்த அல்லி சான்றுரைக்கும்
கண்ணாளன் வருகையை
கேட்கவில்லை உன் காதில் மட்டும்
என் இதய மலரின் விசும்பல்கள்…
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்