என் குழந்தை

0
706

 

 

 

 

பிஞ்சு
நிலவே
உன்னை
கொஞ்சும்
போது சுகமே
என் வைரமே
என்னை
அம்மா என
அழைத்த
முதல் பரிசமே
உலகமே நீயடி
என் கண்ணே
என் உதிரத்தை
உணவாக்கி
என் உயிரை
காணிக்கையாக்கி
தவமாய் பெற்ற
வரமே
உன் சினுங்கலில்
தவித்து போவேன்
உன் அழுகையில்
உன் அசைவினை
அறிந்து
நடந்திடுவேன்
கண் அசைத்து
என் கவலை
மறக்க செய்வாய்
என் பொன்மணியே
உன் மொழிதான்
எனக்கு
ஆறுதல்
என் குழந்தையே..
வெறொன்றும்
வேண்டாம்
இவ்வுலகிலே
நீ மட்டும் போதும்
என் அருகிலே
என் கனவே
உன்னை
அணைப்பதில் தான்
என் சந்தோசமே.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க