கனவுகளில் வாழ்பவள்

0
533

கொழுந்தெனச் சிரிக்கிறாள்
தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள்
அத்தனை ஏக்கத்தையும்
ஒரு புன்னகையில் மறைக்கிறாள்
மங்களகரமாய் இருக்கிறாள்
இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள்
துளித் துளியாய் வடியும் வியர்வையையும்
அட்டை குடித்து மீந்த குருதியையும்
தேயிலையில் சாறெனவே சேமிக்கிறாள்
விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளில்
தன் எதிர்காலத்தையும் விதைக்கிறாள்
பார்வையில் உள்ள பளபளப்பு
அவள் வாழ்க்கையில் வரும் நாள் தான் என்றோ?

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க