loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!

என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே.. என் சுவனத்தின் இருப்பிடமே.. என் பாசத்தின் பெருநிலமே..!! காணக்கிடைக்கா பொக்கிஷத்தை கைநழுவி விட்ட துயர் உறைவிடமாய் மனை முழுதும் நிறைந்திருக்க ... விம்மியழும் மனதிற்கு வேறெதுவும் ஆறுதலில்லை உன்னைத்தவிர...!! மறக்கவும் முடியுமா...

கனவுகளில் வாழ்பவள்

கொழுந்தெனச் சிரிக்கிறாள் தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள் அத்தனை ஏக்கத்தையும் ஒரு புன்னகையில் மறைக்கிறாள் மங்களகரமாய் இருக்கிறாள் இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள் துளித் துளியாய் வடியும் வியர்வையையும் அட்டை குடித்து மீந்த குருதியையும் தேயிலையில் சாறெனவே சேமிக்கிறாள் விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளில் தன் எதிர்காலத்தையும் விதைக்கிறாள் பார்வையில்...

அம்மா

அற்புதம் அதிசயம் என்று எங்கெங்கோ அலைகிறார்கள் அம்மா உன் அருகாமையில் தொலைந்த என் வலி வேதனைகளை பற்றி அறியாதவர்

தாக மேனி..

0
கோபத்தின் உச்சியில் சோகத்தின் தீண்டலில் மோகம் அதனை விடுத்து தாகத்தை போக்கிடவே தேகம் இது ஏங்கியதே.. !!!

சத்தியமடி கண்ணே…!

0
இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்...

அருவுருவங்கள்

விம்பங்கள் பல உருவாகின மனிதனின் சிந்தனைகள் போல அந்த விம்பங்களுக்கு நிலை இருக்கவில்லை மானிடன் உயிர் கொடுத்தான் ஆனாலும் அவை பேசவில்லை உடைந்து போனான் மானிடன் செய்வதறியாது தவித்தான் தன் மாயவிம்பங்களை அதனுள் புகுத்தினான் தன் எண்ணங்களை அதனுள் திணித்தான் தன் சித்தாந்தத்தை கொண்டு அதை செதுக்கினான் ஆனாலும் விம்பங்கள் பேசவில்லை இன்னும் ஒரு...

கனவிலும் கொல்கிறாய்..

0
இரவின் ஒளியில் ஒற்றையடி வழியில். நிலாப்போல நீயும் உலாப் போவது போல் கனாக் கண்டு நானும் காவலுக்கு வரவே சினங் கொண்டு நீயும் - என்னை சிறையில் தள்ளுவது ஏனடி ???

கல்யாண பெண் பூவே

0
மஞ்சள் பூசி மாலை சூடி மதிமுகத்தாள் நீயும் , என் மனதிற்குள் நுழைய என் மதியும், மந்தமான விந்தை தான் என்ன???!

வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!

சுற்றிலும் வெம்மை உள்ளுக்குள் வெறுமை தீச்சட்டி தேகத்தில் துளிர்த்ததென்னவோ புழுக்கப் பூக்கள்... !! உள்ளுக்குள் உலை கொதிக்க பிடரியில் அறைந்தால் போல் கிடைத்ததென்னவோ அனல் முத்தங்கள்..!! சுள்ளென்ற முதுகும் கொப்புளித்த பாதங்களும் தடுமாற எங்கள் ஒட்டிய வயிற்றுக்குள் ஓராயிரம் நண்டுகள்....!! இந்திரனின் மன்மத அம்புகளும் திக்குமுக்காடுகின்றன எங்களின் , உஷ்ணப் பெருமூச்சில்..!!! இன்னும் எத்தனை வலிகள் இத்தனை எரிச்சல்களும் இனிமையானவை எங்களுக்கு எங்கள் வயிற்றுப்...

எதைக் கொண்டெழுதினாய்…!!!

உண்மையைச்சொல் இறைவா...! எதைக் கொண்டெழுதினாய் – இவர்கள் விதியின் விதியை....?? இதய வயிற்றுள் துக்கம் செரித்துப் பிறக்குது வேதனையின் அமிர்தம்....!! சரித்திரத்தின் துக்கம் சுமந்த கல்வெட்டுத்தான் இவர்கள் வாழ்க்கையோ...!!

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!