எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து
தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை
பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி
நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி
மேலும் மேலும் பாரினில் சிறக்க
பல வழிவகை அறிந்து வளர்ப்பார்
வருந்தி வாட்டும் வறுமையும் துன்பமும்
தாமே ஏற்று தம்முள் புதைத்து
தம் குழந்தைகளை காக்கும் தாராளர்
தன்னலம் துறந்து உன்னலம் சிறந்து
உன் சந்ததி நலம் பெருக்கினர்
பிறவியில் பாதியை உனக்கே அளித்து
உயர்த்திய உத்தமரை உதாசீனம் செய்யாதே
உள்ளக் கண்ணாலே உணர்வுடன் நோக்கிடு
கடவுளென எண்ணிட கல்மனம் தடுக்கிறதா?
பாவம் மனிதராகப் பார் அவர்களை…
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்