புரிதல் இல்லா
பிரிதல்களில் யாரை
பிழை சொல்ல…!
தூரமாய் நின்று
வேடிக்கை பார்ப்பதை தவிர
வேறு வழியேதுமில்லை..!
தூதுவிட்டு ஒட்டி விடுகையில்
துளிர்த்துவிடுவதில்லை
புரிந்துணர்வு…!
தன்னுணர்வு பெற்று
தானாய் தவறையுணர்கையில்
தழைக்கிறது நம்பிக்கை..!
அடித்தளம் அதிலே
அன்புடன் உருவானால்
தோற்பதில்லை வாழ்க்கை..!
வாழ்க்கை
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்