வாழ்க்கை

0
1010

புரிதல் இல்லா
பிரிதல்களில் யாரை
பிழை சொல்ல…!
தூரமாய் நின்று
வேடிக்கை பார்ப்பதை தவிர
வேறு வழியேதுமில்லை..!
தூதுவிட்டு ஒட்டி விடுகையில்
துளிர்த்துவிடுவதில்லை
புரிந்துணர்வு…!
தன்னுணர்வு பெற்று
தானாய் தவறையுணர்கையில்
தழைக்கிறது நம்பிக்கை..!
அடித்தளம் அதிலே
அன்புடன் உருவானால்
தோற்பதில்லை வாழ்க்கை..!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க