loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poem

குறிச்சொல்: tamil poem

விழிதிறந்து பார்!

அதிகாலை வானெட்டி முத்தமிடும் சூரியன், பந்தயக் குதிரையாய் விரைந்து மறைந்து போகும் இருள், பாய்விரித்துப் படுத்துறங்கும் பச்சைப் புல்லினங்கள், புல்வெளியின் மடிதனில் முடங்கிக்கிடக்கும் பனித்துளி, வெட்கத்தைச் சிந்திச்செல்லும் பெண்ணினத் தென்றல், மெல்லிசை கீதம்பாடி பறந்து செல்லும் பறவை, முணுமுணுத்துக்கொண்டு தத்தளிக்கும் நீரோடை, தனிமையின் நிழலில் ஓய்வெடுத்துக்கொள்ளும் ஒற்றை மரம், முகம் திறந்து புன்னகைக்கும் மலர்கள், மனம் விரும்பி...

காலம் மாறியது

0
ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம் சண்டையை வளர்த்திட்ட இந்தக் காலம் அன்பு கிடைப்பது அந்தக் காலம் அன்புக்கு அலைவது இந்தக் காலம் ஒற்றுமையே ஓங்கி...

பாடசாலை வாழ்க்கை

2
சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா ஆனந்தத்தில் வாழ்ந்த காலமது இறைவன் கொடுத்த அழகிய காலமது இறையடி சேரும்...

சூழ்நிலை

0
உயர்ந்து நிற்கும் வானமதில் ஓடும் மேகத்திலும் சோகம் உண்மையான உறவுகளின் இதயத்திலும் சோகம் வீசும் தென்றலிலும் சோகம் விண்மீன் கூட்டத்திலும் சோகம் மனிதன் அறிவின் மூடனாய் ஆனதும் மனிதன் அறிவின் அறிவாய் ஆனதும் இவ் யுகமே! காரணம் யாது எனின் மூடன் அறிவாளி என்று யுத்தத்தினை...

அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன்?

சினமுற்ற சூரியன் கருவுற்று செம்பாலை யொன்றைப் பிரசவிக்க அக்னித் தென்றல் வீசுதடி ஏர்பிடித்து நானெங்கே நிலமுழுவுவேன் சூட்டிலே வயல்மேனி வெடித்து வியர்வைக் குருதி கசிய நிலமடியில் துமிகூட இல்லையடி சேனைக்கு நானெங்கே நீர்பாய்ச்சுவேன் விதைநெல் முளை முடங்கி விதைக்குள்ளே மலடியாக வேறெவளோ உண்டானால் அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன் அனலெல்லாம் சுகத்...

கடைவிழி கஜாபுயலு

கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி தேன்சுரக்கும் பாற்கடலு! நாதித்திக்கும் முத்தத்திற்கு நல்சுவை தேனிதழு! தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு நிவாரணி உன்விரலு! புருவமிரண்டும் கூத்தாடும் மழைத்தோகை மயிலு! மேகமிருண்டு வான்மூடும் இனியுமடிக்காது வெயிலு! போதையின்றி மயக்கும் விழிச்சாயம் கருங்குயிலு! புன்சிரிப்பால் பொசுக்கும் பூலோகப் பூந்தயலு! திட்டமிட்டு சிக்கவைக்கும் கடைவிழி கஜாபுயலு! வட்டமிட்டு என்னமட்டும் பம்பரமாய்...

ஒரு துளிக் கண்ணீர்

0
அன்பு கொண்டு அடிமையாகி அடிமனம் வேதனைப்படுகையிலே ஆறுதல் தேடி நிற்க ஆதரிப்பார் யாருமில்லை எம்மனம் தேற்றவென்று எமக்களித்த பரிசே ஒரு துளிக் கண்ணீர் பித்தலாட்டக் காதலிலே பிரிவுதான் வருகையிலே துன்பம் நேர்கையிலே துயரத்தில் ஆழ்கையிலே தீராத சோகத்தையும் தீர்த்திடுமே ஒரு துளிக் கண்ணீர் தனித்து நாம் நிற்கையிலே தனிமை உணர்கையிலே தலையணைக்கு வாயிருந்தால் தயங்காமல்...

அறிவகமே நூலகம்

அழிவடையும் உலகில் அனைத்துமே அழிந்து தூளாகும் அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின் அத்தாட்சி நூலாகும்! அறிவுடைமை இல்லையேல் அறிவீனத் தலையோங்கும் அறிவீனர் தலைதாங்கும் ஆட்சியும் குடைசாயும்! கற்பவை எள்ளளவாயினும் காலத்திற்கு உதவிடுமே! கல்லாத எள்ளாளனாயினும் கல்வெட்டும் உதரிடுமே! தேடிக் கற்கும் கல்விதான் நெஞ்சில் கூடிக் குடிகொள்ளும் நாடிச் சென்று கற்றாலே நமது தலைவிதியும் வெல்லும் அறிவகமே நூலகம்! அதை...

மதியின் கலங்கம்

0
நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள் நிலவின் ஒளியில் அதன் கலங்கம் மறைந்து தெளிந்த அழகு நிலவு முகிலின் நடுவே ஏறிப்பார்த்தது ரசிக்கும் உள்ளத்திற்கு நிலவின்...

அதன் அளவு அவ்வளவுதான்

0
நாம் யாரும் மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது கிடையாது... இலகுவில் ஏறி மிதித்து தகர்த்து விட்டுச்சென்றிருப்போம் எனினும், எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம் அவ்வளவு சிறியதாய் தோன்றியது கிடையாது மண் துணிக்கை கொண்டு அமைத்த புற்றாயினும் எறும்புகளின் கண்களுக்கு என்றுமே மாளிகைதான்... அவற்றின் உள்ளங்களில் யாராலும் அசைத்திட முடியாத கரும் பாறைகளாலான குகையாக இருந்திருக்கும் இருந்தாலும் எமது கண்களுக்கு காற்றுக்கு எழுந்து பறக்கும் புழுதி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!