அன்னை

0
1771
குத்தென்ற பார்வையில்
குவிந்திருந்த அத்தனை நீரும்
கன்னத்தை தழுவியோடுகையில்
நெஞ்சத்தில் பொதிந்த
பொக்கிஷ நினைவலை 
எட்ட நின்று 
காட்சி தந்தது…
 
திருமண பந்தத்தின் பின்
கருவொன்று சுமந்து
கடினத்துடன் பெற்றெடுத்து
கனியாக்கி காயாக்க
அவள் வாழ்வு,
கன்றின் காலத்தில் 
கரியாகிய 
கலங்கிய அலைகள் அது…
 
அவளும் அகிலம் போற்றும்
அற்புத அன்னையாயினும்
ஈர் கண் ஒன்றித்து
இளம் பூவாய் போதித்த
இவள் மகனை
இன்னொருவள் 
கை பிடிக்கச் செய்து
கஷ்டம் பல கண்டாளே…
 
அத்தையோர் அன்னையென்று
புரியா மருமகள் 
அவளாயிற்றே…
 
மணம் புரிந்து 
மாதம் கடந்து
தமையன்
மனையாள் கன்றீன்ற
பேரன் கை தழுவ முன்
வந்தடைத்து விட்டாளே
வயோதிபர் இல்லத்துக்கு…
 
ஆசையாய் வளர்த்த மகனை
அருமை பாராட்ட
அவள் கொண்ட பாக்கியம்
அவ்வளவு தானோ…
 
அன்னையின் 
பாத அடி சொர்க்கம் தொலைத்து
பூமியில் தேடும்
இன்பம் எதுவோ…??
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க