குறிச்சொல்: கதைகள்
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29
காத்திருந்த நாட்கள்
என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 28
தடைப்பட்ட பயணம் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள் பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள், ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்தனர்....
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27
தொடர் போரினால் நலிந்த ஈராக்
திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம். அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த சில வினாடியில் வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது. அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல். அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு.
ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது. ஆனால் விழுந்த அனைத்து குண்டுகளும் குடியிருப்புக்கும், உணவுக்கூடத்திற்கும் சில மீட்டர்கள் தள்ளியே...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 26
சில விபத்துக்கள் தாக்குதல் காரணமாக ஈராக்கில் சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதித்திருந்த நாட்களில் பாதுகாப்பு காண்வாய் வரும்போது முகாமுக்கு அதிகமான சரக்குப்பெட்டக வாகனங்கள் வந்துவிடும். அதில் சில சரக்குப்பெட்டகம் முழுமையும் கோக் அல்லது பெப்ஸி...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24
உண்ணி கிருஷ்ணன்
முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள மணலின் நிறத்திலேயே இருக்கிறது. பாலை...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23
முகாமில் நடந்த விருந்து
கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை. அக்டோபர் மாதம்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22
நட்பை விலக்கிச் சென்ற பாயல்
போர்முனையில் மது அனுமதி கிடையாது. அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள். கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய டாங்கர் லாரி...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21
பாயல்
முகாமில் பணி குறைவான நாளில் தலைமை சமையல்காரர் உற்சாக மனநிலையில் இருந்தால், சக சமையல்காரர்களிடம் பணியாளர்களுக்கு இரவுணவாக சப்பாத்தி செய்ய சொல்வார். ஒருநாள் இரவு உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அமெரிக்க ராணுவ...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20
சாவின் விளிம்பில்
எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த நாவுகள்,பசியை உணர்ந்திருக்கவில்லை.போர்முனையில் குடும்பம், குழந்தைகளைவிட்டு பிரிந்து வாழும்...