வள்ளுவர் கண்ட இல்லறம்

0
403
200px-திருவள்ளுவர்_கலைப்_படைப்பு-99035f5b

தெய்வ புலவர் பெண்மை பேசுவார்.இல்லத்தில் முப்பபொருப்பே பெண்ங்கள். இல்லத்தின் அரசி என்பார். இல்லறம் அவளின் அற்றாலால் பொண்களால் இயங்குகின்றன. பெண்கள் குலவிளக்காய் அல்லது ஒளிவிளக்காய் என்று வரலாற்றின் சிறப்பு.  குடும்பம் என்றால் பெண் பெண்ணில்லை என்றால் இனிமையற்ற வாழ்வாகும் என்று கூறாலாம். அதைதான் வள்ளுவன்
“மனைமாட்சி  யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினும் இல்”

பெண் இல் வாழ்க்கை மகனை நற்பண்பு மனையவளிடம் இல்லையென்றால். ஒருவருடைய  செல்வங்கள் அல்லது சிறப்புடன் இருந்தாலும் பயனில்லை.
பெண்ணின் இல்லறத்தில் நல்ல அன்பு
இருந்தால்  அந்த இல்லறம் சிறப்பாகும்.
இல்லறவாழ்க்கைக்கு அடிப்படை அன்பு ஒன்றாகும். இல்வாழ்வில்  அன்பின் ஒளி முற்றும் பரவுவதல் வேண்டும் . வள்ளுவர் இல்லறவியல்  அன்புடைமை,அரசில், அறிவுடமையையும் கூறினார்.

“அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பாடும் பயனு மது”

இல்லறவாழ்வு இனிதே! நடக்க காதலர் உள்ளங்களில் என்றென்றும் அன்பு அரசு புரிதல் வேண்டும். உள்ளத்தில் அருஞ்செய்ய இனங்கவேண்டும்.
அன்பு இல்லையேல் அதன் பயனில்லை:
இல்லறத்தில் அறிவு பகந்துணரும் அறிவு ஓங்கி நின்றால் வாழ்வு இன்பற்ற வாழ்க்கை மாறிவிடும் தெய்வபுலவர்
இல்லறவியல்  அன்புடைமை அதிகாரத்தில் அன்பை விளக்கியுள்ளார்.

அன்பிலையேல் அதன்பயனாகிய  அறமில்லையாம் இல்லறத்தில்  அறிவு  பகுத்துணரும் அறிவு ஓங்கி நின்றாலே வாழ்வு இன்பமற்ற வாழ்வாக மாறிவிடும் ,எனவேதான் வள்ளுவர் இல்லறவியலில் ‘அன்புடைமை ‘ என்ற அதிகாரத்தை அமைத்து , அன்பை வலியுறுத்தலானார்.

அன்பிலையேல் அதன்பயனாகிய  அறமில்லையாம் இல்லறத்தில்  அறிவு  பகுத்துணரும் அறிவு ஓங்கி நின்றாலே வாழ்வு இன்பமற்ற வாழ்வாக மாறிவிடும் ,எனவேதான் வள்ளுவர் இல்லறவியலில் ‘அன்புடைமை ‘ என்ற அதிகாரத்தை அமைத்து , அன்பை வலியுறுத்தலானார்.

சான்றாக இளங்கோவடிகளின் நெஞ்சசையள்ளும் சிலப்பதிகாரத்தில் மாதவி , கோவலன் வாழ்வை க்  கூறலாம். கோவலன்  மாதவியை  விரும்பியது கலைக்காக ,காயுள்ளத்தோடு, கலையரசி மாதவியை கலைஞன்    கோவலன் விருப்பினான், எனவேதான்  அவன்  பெண்ணை உருவப்படுத்தி  ஒரு  பாடல் பாட , அவள் அவன் செயலுக்கு மறாக ஒரு  பாடல் இசைக்க, உடனே மாதாவின்  செயக்கை அறிவுக்  கண்கொண்டு நோக்கினால் கோவலன்,பின்னர் விருப்பல் எழுந்த  அவர்கள் வாழ்வு’ மறைந்து  மாறாக, மாதாவின் குலத்தயே உள்ளம் உணரப்  பழித்தான்,அன்பு  கொண்டு,மாதவியும், கோவலனும்  வாழ்ந்திருந்தால்,குற்றங்குறைகளை மாற்றுக் கண்ணோடு  பகுத்துணரும் அறிவிக்கண்ணோடு கண்டிருக்க மாட்டார்கள். ஆயின் கண்ணகியிடமோ அவன் ஆராக்காதல் கொண்டிருந்தான். இல்லையெனில் மாதவியிடமிருந்து வந்த  கோவலன் சற்று  தயங்காது, பாடமை செக்கையுட்புக்குதத்தன் பைந்தொடி,வாடிய மெனிக் கூறுவாளோ? எனவே மேற்கூறிய சிலம்பு சான்றால் இல்லறம் இனிது நடக்கக்  கணவன், மனைவி உள்ளங்களில் அன்பு  நிரம்பி இருந்தல்  வேண்டுமென்று நாம் அறிகின்றோம்.

இனி  இல்லறத்தின் சிறப்பை உணர்ந்த வந்த பெருந்தகை  அறத்தாறு நின்று இல்வாழ்வு வாழ்ந்தாலே ‘வீடு’ பேறு அடையலாம் என்றார்.

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்? “குறள் – 46

மனைவியோடு கூடிய வாழ்க்கையை  அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.

ன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கிற அளவற்ற மேன்மையைத் தரும். இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. இவ்வுலகத்தில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
இல்வாழ்வார்க்கு அமைய வேண்டிய இன்றியமையாத குணம் அன்பு. இது அகத்தே உணரப்படும் மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. மணமான ஆண் பெண்  தாங்கள்  ஒருவருக்காக  ஒருவர் உள்ளதாக உணருவது அன்பின் முதல்படியாக அமையும். காமத்தில் தோன்றிய, தன்னலம் சார்ந்த அன்பு பின்னர் அதனைக் கடந்து பிள்ளைகள், உற்றார், உறவினர், நட்பினர் என்று, தன்னலம் மறைந்து, பரந்து விரிகிறது. அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற அடுத்த நிலைக்கு உயர்கிறது. ஆர்வம் இன்னும் உயர்ந்த நிலையான நண்பைத் தருகிறது. அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்குகிறது என்கிறது இவ்வதிகாரம். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு அன்புதான். அன்பு இல்லாவிட்டால் உண்டாகும் குற்றங்களும் பேசப்படுகின்றன. .தமிழர்கள்  இல்லறத்தை “வீடு” என்னும் சொல்லால் குறித்ததான் உட்பொருள் உணர்க!

எனவே  வையத்துள் வாழ்வாங்கு வாழ, அன்புள்ள உள்ளங்கள் வேண்டு  மென்று, வள்ளுவர் கண்ட இல்லறம் அன்பின் அடிப்படையைக்  கொண்ட தென்று அறியலாம் ஒவ்வொருவரும் குறளை நன்கு கற்று , அந்நெறி நின்று  வையத்துள் வாழ்வாங்கு  வாழ்வோமாக.

வள்ளுவர் சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்கு பெரும் பங்கு இருக்கின்றது.மாற்றம் மெல்ல மெல்ல தான் நிகழும் .அதற்கு நாம் முயலலாமே. வள்ளுவர் கண்ட சமுதாயத்தை மெய்பித்துக் காட்டி வாழ முயற்சி செய்வோமே.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க