யாதுமாகி நின்றாய் நீ!..

0
1707

 

 

 

 

சிந்தனைச் சக்கரம் சுழல்வதெல்லாம்
உன் நினைவுகள் சுமக்கத்தான்..

கண்ணிரெண்டின் இயக்கமெல்லாம்
உன் அசைவுகள் படம்பிடிக்கத்தான்..

செவிச்செல்வம் கிடைத்ததெல்லலாம்
உன் குரலது கேட்டிடத்தான்..

இதயவறை இப்போது துடிப்பதெல்லாம்
உனை இடையறாது நேசிக்கத்தான்..

விரும்பியே கற்றது தமிழ் அதுவும்
உன்னைக் கவி வடிக்கத்தான்..

என்னவை யாவும் உனக்கென்றான பின்
உயிர் மட்டும் எதற்கு எனக்காய்…

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க