மெழுகுவர்த்தி

0
1392
melting_candle_by_sixteentoomany

 

 

 

 

இருளை விலக்கி ஒளி தரும்
தன் நிலை மறந்து உருகிடும்
தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை

உன்னோடு துணையாய் நான் இருப்பேன்
அச்சம் கண்டு நடுங்கி விடாதே
என்னை பற்ற வைத்து நான் கரைந்திடும் நிலை கண்டு பரிதாபம்
கொள்ள மனம் வரவில்லையா மனிதனே

நானும் ஒர் உயிரென மதியாமலோ பார்த்து இரட்சிக்க பழகி விட்டாயோ
பரவாயில்லை என் ஆயுட் காலம் சிறிதல்லவா
என்னை கொல்லாதவர் யாரும் இல்லை
இருந்தும் ஒளி வீச மறுப்பதில்லை

மனிதா இம்மண்ணில் நான் சிந்தும்
கண்ணீரையையும் கலையாக்கி பேரின்பம் பெற்றாயே
அணு அணுவாய் உருகி கசிந்து பிறர்க்கு ஒளியாவதே என் மகிழ்ச்சி
விடை பெறவா என் மனிதா

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க