போராட்டம் என்பதெல்லாம்
நீ என் மகவு இல்லை என
மனதை ஒத்துக் கொள்ள வைப்பதுதான்
சேர்த்து வைத்த
தூய அன்பில் மொத்தமாய்
ஒரு துளி நீல மையைப்போல்
நிறைந்து பரவி விட்டாய்
மனம் என்பதுதான்
எத்தனை வித்யாசமானது
தூரத்து உறவினன்
போலவே
தன்னிலிருந்து பிரிந்து விட்டது
இப்போதெல்லாம்
வெறும் சூன்யத்திற்கு
பயணப்படும்
கால்களை அப்படியே விட்டு விட முடியவில்லை
நகர்த்தல், நகர்தல்
சேரமுடியா பெரும் வேறுபாட்டுப்
பிளவு
சேர்ந்திருக்க சொல்லும்
அதே காரணங்கள்தான்
பிறிதொரு நாளில்
பிரிந்து விடவும்
வைத்து விடும்
உண்மையில் நேசம் என்பதெல்லாம்
மிகப் பெரும் சாபக்கேடு
வாழ்தலின் பொருட்டு
சகிக்க வேண்டிய ஒரு உணர்வு….
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்