நின் முத்தம்

1
653

 

 

 

 

நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராது
கண்ணம்மா
என் காதலை
நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன்
நீ சொல் என் கண்ணம்மா
அன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று
வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறது
மீளவும் வருவேன் என
நாடோடிப்பறவை சொல்லி நகர்கிறது
எந்த வருடம் எந்த மாதம் எந்த நாள் என குருவிக்குத் தெரியாது
அடுத்த வசந்தம் அடுத்த இலையுதிர்காலம்
அடுத்த பனிப்பருவம் என ஏதோ ஒரு சமயத்தில சந்திக்கலாம் சந்திக்காமலும் போகலாம்
வாழ்க்கை போடும் கணக்கு வருவிகளுக்கு மட்டும் விலக்கா என்ன
நீங்குதலின் பொருட்டு சேர்தலும்
பிரிதலின் பொருட்டு தேடிக்கூடலும்
யார் போடும் கணக்கடி கண்ணம்மா?
சப்தமிடும் அலைகளாய்
அள்ளிஎறிந்த அமாவாசை இருட்டாய்
மனதுக்குள் தீராத குழப்பங்கள்
தீராமலே இருக்க
இந் நெற்றி முத்தத்தில் சொல்லப்படும்
காதலின் சாயைதான் என்னடி என் கண்ணம்மா?

 

 

 

 

 

 

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb…