நாளையும் விடியுமா…??

0
983
இரவின் கோரப்பசி
என் தூக்கத்தை
முழுமையாய் விழுங்கி
தேவையற்ற எண்ணங்கள்
பலதை ஏப்பம் விட்டது…
நிலவொளியில் 
காய்ந்து கிடக்கும்
எனை கட்டித்தழுவிய
அமைதிக் காற்று
ஆரவாரமற்று
தாலாட்ட
முயற்சித்தும்,
முறையற்ற
எண்ணம் பல 
எட்டிப்பார்த்து,
மூடிய விழிகளில் 
முழுவதும்
கற்பனையாய்
நாளைய
விடியலில்
நிம்மதி கிட்டுமோ என
மின்னும் உடுவுடன்
ஓசைகளற்ற பேச்சுடன்
மணி முள்ளும்
நிமிட முள்ளும்
போட்டி போட்டு
சுழன் றோட
இன்றும் விடியவில்லை
என்ற ஏக்கத்தோடு
மறு ஒரு நாள்
கழிக்கிறேன்….
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க