தாய்

0
591
20200412_095140

தாயின் கருவறையிலே
கற்பிக்கப்பட்டு விடுகிறது
அம்மா என்னும் உலகம்…

என்னை பெற்றெடுத்த தேவதையே
உன் அன்பிற்கு இவ்வுலகில்
எதையும் ஒப்பிட முடியாது.

தாய் எனும் ஒளி
இவ்வுலகில் இருப்பதால் தான்
பாசம் எனும் பந்தம் இந்த உலகில்
உலா வருகிறது.

கவலையாய் வந்தாலும் சரி
தோற்றுப்போய் வீழ்ந்து விட்டாலும் சரி
என் அருகில் ஆறுதலாக
இருப்பால் என் தாய்
என்றுமே…

நான் பிறக்கும் முன்னே
என் முகம் பாராமல் என்னை
நேசித்த உன்னத உறவு என்றால்
என் தாய் தான்…

உன் கருவறையில் இருக்கும் போதே
இதயவறையை தந்தால்
என் இனியவளே என்றும்
உனக்காக இறைவனிடம் பிராத்திக்க மறக்கவில்லை
நான்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க