ஒரு துளி உதிரத்தில்
உருவான கருவை
தன் உதரத்தில் சுமந்து
உணவூட்டி உயிர் காத்து
உயிரை பணயம் வைத்து
உலகிற்கு கொண்டு வந்து
பிரசவவலி மறுநொடியில் மறந்து
பரவசமாய் மார்போடணைத்து
உதிரத்தையே உணவாக்கி
ஊண் உறக்கம் துறந்து
உள்ளத்தின் ஆசைகளை
ஆழக் குழி வெட்டி புதைத்து
உனக்காக மட்டுமே வாழ்ந்து
உனை ஆளாக்கி உயர்த்திட்ட
உத்தமி அவள் தான் தாய்…
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்