தாய்மண்

0
960
images (9)-a1eea6c3

 

 

 

 

 

ஒரு செடியைப் பிடுங்கி
மற்றொரு இடத்தில் நடும் போது
அள்ளும் தாய்மண்ணை
ஒரு பிடிக்குள்
அடக்கி விடுகிறோம்!

தாய் மண்ணின் அளவை
கணக்கிடும் சூத்திரத்தில்
அதன் வேர்கள்
சொந்த நிலத்தில்
பயணிக்கும்
பல நூறு மைல்களை
எப்படி சுலபமாக கழித்து விடுகிறோம்??

புலம்பெயரும் செடிகளெல்லாம்
மரமாக வளர வளர
தாய் நிலத்தின் திசையை நோக்கி படர்த்தும் வேர்களில்
நிச்சயம் ஒருநாள் தாய்மண்ணைத் தொட்டு விடுவோம் என்ற நம்பிக்கை
துளிர்விட்டுக்கொண்டிருக்கிறது
பழைய நினைவுகளின் ஈரத்தில்!

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க