தனி ஒருவன்

0
1625

 

 

 

 

நல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமா
நலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோ
கற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோ
கண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோ
விதைத்த விதை மண்ணுள் மடிந்ததோ
வீறு கொண்டு எழு விசை ஒன்று இல்லையோ
தன்மானம் தலைக்கொண்ட தருமத் தமிழனே
தண் பனி மறைத்து பரிதி பகலில் வருவது போல
விடா முயற்சி என்றும் வியக்கும் வெற்றி தரும்
வீட்டிற்குள் முடங்காதே விமர்சனத்தால் துவழாதே
ஏற்றம் தரும் ஏணி உன்னை துணிந்து
ஏழு கடல் தாண்ட விடும் தவிக்காதே தரணியின்
வெற்றித் தனயன் தாழ்மையுள்ள நீ தனி ஒருவனே..!

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க