கூடைபோட்ட குடும்பப் பெண்

0
1363

மா நிற மேனியுடன்
கருத்த அருவி கொண்ட
நீண்ட கூந்தலும்
முழுநிலவில் வெட்டி எடுத்த
அரை நிலவின் நெற்றியும்
அதற்கும் அழகூட்ட வைக்கப்பட்ட
குங்குமச் சிவப்பும்
நீண்டு புடைத்த
சாய் கோபுரம் கொண்ட
அவளின் மூக்கும்இ
அதற்கும் கிரீடம் வைத்த
அவளின் மூக்குத்தியும்
பெண்மையின் இரகசியத்தை
பேசிக் கொண்டே இருக்கிறது இன்றும் கூட
ரவிக்கை அணியாத பெண்ணாக இருந்தவள்
சேலையால் சுற்றி
உடலை மறைக்கும் உயர்ந்தவள்
தனது கற்பின் இரகசியத்தை காப்பாற்றுபவள்
அதனால் தான் இவள்
கற்புக்கரசியாகிறாள்.
கரம் எடுத்து
விரல் கோர்த்து
பச்சைமணி இலைகளை
பக்குவமாய் கிள்ளி எடுத்து
மல்லிகையும் நாணத்தால்
தலைகுனியும்
கூந்தலுக்குள் சொருகி
அப் பச்சை மலரினை
பத்திரமாய் வைக்கிறாள்.
அழகின் இனிப்பு
மிதமிஞ்சி சென்றதனால்
பச்சை மணி இலைகள்
பத்திரமாய் கூடையில் விழுகிறது
நிரம்பி வழியும்
நீர் குடம் போல்
தலையில் போட்ட
கூடை கொழுந்தின்
நிறையால் நிறைந்திருக்கும்
ராத்தலின் நிறைக்காக காத்திருக்கும்.

பத்தாம் திகதி வந்தாச்சு
இரத்தத்தை உறிஞ்சிய சம்பளம் கிடைச்சாச்சு
கடன் கொடுத்த காரன் எல்லாம்
காலை ஆட்டி நின்றாச்சி
யார் சொல்லியும் கேட்கவில்லை
பத்து ரூபாய் கூட
இப்பாவி கையில் தங்கவில்லை
என் மகனும் சொல்லி இருந்தான்
‘உனக்கு சோறு போட நான் இருக்க
நீ ஏன் கஷ்டப்பட வேண்டும்’என்று
என்ன செய்ய
நான் பெற்ற சாபம்
கடனை
என் பிள்ளையை கொண்டு
அடைக்கக்கூடாது என்பதற்காக
எனக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறேன்
என் சாபக் கடனை!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க