கலைமகள்

0
758
2-a0ec0920
மண்ணின் பெருமை குரியவளே தமிழ் பெண்ணே!

கலை மகளே ! அமிழ்தமாய் திகழ்ந்தவளே !
உன்னைப் போல் உலகில் வேறு தன்
மொழியால் எங்கேனும் உண்டா? என்றாள்
அமிழ்தம்  இன்சுவை  எவளிடத்தில் அமைந்திருக்கும்?
உன் பெருமை உலகமெங்கும் கமழ்கின்ற
நிலையினும் தன்னடக்கம் காட்டுகின்றாய்:
இன்பத்தை ஊட்டுகிறாய் இமிழ் கடல்
மண் இவ்வுலகில் தோன்றும் முன்னே
என் உயிரே! நீ தோன்றி வளர்ந்தாய்!
மொழிகளின் மூத்தவள் நீ
இலக்கியத்தின் அமிழ்தமாய்  இவ்வுலகில்
அமிழ்தமாய் திகழ்ந்து இலக்கணத்தில் உயிர்
படைத்து வளர்வதால் குறைதல் இன்றி
பெற்றுள்ள செல்வவளத்தால்- கொஞ்சுதல் போல் மொழி
என்றென்றும் தாழ்தலின்றி  முற்றும் நீ தனித்தியங்கி
வாழ்வதற்கு உன்னால் முடிவதனால் சீரிளமை கன்னியானால்!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க