கருவாக்கி உருவாக்கியவளுக்காய்….

0
934

உயிரில் உயிராய் கலந்து
உன்னில் நான் வாழ்ந்த
உன்னத ஐயிரு மாதங்கள்
உண்மையில்  நான் செய்த தவம்
உந்தன் வேதனை அறியாமல்
உள்ளூர நான் பெற்ற இன்பம் பல


உலகின் வறுமை தெரியாமல்
உன் உதிரத்தை உணவாக்கி,
உன்னில் ஓர் சுமையாகி,
உலகினை காண வந்து,
உன் சுமை குறைத்து,
உலகச் சுமை அதிகரித்தேன்! 
ஆயினும்
உந்தன் மனமெனும் கோயிலில் என்றும்
உயரிய இடத்திலிருக்கும் அன்புச்சுமை யான்! 
உன்னதமாய் நான் செய்த தவம் தான்
உன்னை என் அன்னையாக்கியது
உன்னில் அனைத்தும் அடக்கம்
என்பதால்தான்(நான்உட்பட)   
உனக்குள் என் எண்ணம் சொன்னேன்.
உலகமதில் எந்த பிறப்பானாலும்
உந்தன் சிசுவாகவே பிறக்க வேண்டும்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க