வெயில் காலத்திலுள்ள
கானல் நீரை போல
ஏமாற்றிச் செல்லவா
வந்தாய் என் துயிலில்
ஏமாற்ற வந்தாலும்
என் இரவில்
பல சந்தோஷம்
தந்தாய் என் மனதில்
என் இமைகளை
மூடிய பின்
நுழைந்தாய் என்
அறைக்குள் அனுமதியின்றி
மறு இமை
திறக்க முன்
சிதறிச் சென்றாய்
எவ்வித நனவுமின்றி
கண்டேன் பல இன்பங்களை
ரசித்தேன்
வாழ்வின் சுகங்களை
ஏனோ அறியாமல் இருந்தேன்
இவை யாவும்
நிலவுடன் சென்று
மறைந்துவிடுமென்று…..
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்