கனவிலும் உன் நினைவே

0
653

கடலோர மணலில் பெயரெழுதி
கைவிரல் சுருள்கேசம் கோதி
விடலையின் பருவம் விளையாடி
விழிமுன் நீயிருந்த காலங்கள்
பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டு
பிள்ளையார் கோயில் வந்தாய்
படிக்கும் பெருங்கதை மறந்து
பார்வைக்குள் உயிர் நெய்தாய்

மடிப்புக் குலையா வேட்டியோடு
மருதமர நிழல்மறைவில் நானிருந்து
அடிக்கடி விழிசாய்த்து அழைக்க
ஆகாதென்று அசைவில் சொன்னாய்
துடிக்கும் இதயத்தின் வேரறுத்து
தூரத்தே விலகியேன் சென்றாய்
நடிக்கும் காதலென்று நானறியேன்
நான்காணும் கனவுகள் நீநின்றாய்

படிக்கிறேன் பகலிரவாய் உன்கவி
பார்க்கும் திசைதோறும் உன்முகம்
துடிக்குமென் இதயத்தில் உன்பெயர்
தூக்கமில்லாக் கனவிலும் துளிர்க்கிறாய்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க