உதயம் தேடும் அஸ்தமனங்கள்

0
521

 

 

 

 

 

நீளப்பசி இரவுகளை
நீயில்லா பொழுதுகளை
வெளித்திறந்த ஜன்னல்
விழிதிறந்த மனதில்
வெறிச்சோடிய நினைவுகளில்
வழித்தெறிந்த துயரங்களில்
பூக்களே
தென்றலே
கேளாது போகும் பௌர்ணமியே
நகர்ந்து ஊறும் மேகப்பிளவே
நான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன்

என் ஈரமுத்தங்கள்
உரசாத உன் கன்னத்தின்
வாசனை என்னவென்று என் நாசிக்கு சொல்லவேண்டும்
ஆழமான மூச்சுகளில் நான்
சுவாசிக்கப்போதுமாக இருந்தது உன் நினைவு
என்று
ரத்தம் சுழற்றும் என் நாளங்களுக்கு சொல்ல வேண்டும்
இங்கே
ஆழக்குழியில் எழும் கசப்புகளை சகிக்க
நம் நெருக்கத்தின் இனிப்பே
போதுமாக இருந்தது என
உனக்கு நான் சொல்லி விட வேண்டும்
பூவே
என் இளந்தளிரே
நெடிது வளரும் அன்பின் கிளையில்
என்னையே துளிரச்செய்யும்
ஆணிவேரே
வருவேன்
எனும் நம்பிக்கைதான்
எத்தனை வலியது
அதுவே நாம் வாழ்வின் மிச்சங்களை
இழந்துவிடாதிருக்க செய்கிறது
இங்கே அஸ்தமனத்தின் துயரங்களை
நான் நினைக்கவில்லை
நாளைய விடியல் நமக்காகவும் இருக்கும்தானே…!!!

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க