இயற்கையுடன் இவள்…

0
1439
ஈரம் படித்த
வீதியோர 
நடை பாதையில்
பாதம் பதித்த
ஒரு நடை பயணம்…
வான் அழகை
முகில் மறைத்து,
வெண் பனியை
பூமிக்கு பூஜித்து,
கால் எங்கும்
குளிர் புகை ஏற,
மின்னல்கள் 
ஒளி சிமிட்ட,
இடியோசை 
கைதட்ட,
மெல்ல மலை சாரல்
மேனி எங்கும்
பரவி வர,
அதை தாங்க
மனமில்லாமல்
மரத்தின் கீழ்
தஞ்சமடைந்து
இலைகளில்
மிச்ச சொச்ச
துளிகள்
இதழ் நனைக்க,
ஒடுங்கிப் போய்
ஒரு கோடாய்
நின்று மழையழகை
மெய் மறந்து
காமுறுதல் செய்து
ஈரக் காற்றை
சுவாசிக்க 
யாசகம் செய்து,
மழை யாகம்
முடிந்த பின்னும்
மனமில்லாமல் 
குழந்தை போல்
அடம்பிடித்த
மனதை
அடக்கி வீடு திரும்பிய 
அந்த நடை பயணம்….
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க