பார் போற்றிட
பாரதம் ஈன்றெடுத்த
பாட்டுடை தலைவன் நீ..!
சாதி துண்டாடிய
சமூகத்தின் சகதியில்
வேதங்கள் துறந்து
வேற்றுமை களைந்தெறிய
செந்தமிழ் சுனையாய் மலர்ந்த
செந்தாமரை நீ…!
பெண்ணை பேதையாய் பேச
பெண்ணுரிமை பேசியவன் நீ..!
முத்தமிழ் புலமை மிஞ்சிய
முண்டாசு கவிஞன் நீ..!
கவியாயிரம் வடித்த
கவிதைகளின் காவலன் நீ..!
அறம் பெரும் தமிழ் மீதிலே
அத்தனை அருகல் உனக்கு..!
உன் கண்ணம்மாவிலோ
உயிரை ஊடுருவிடும் காதல் எனக்கு..!
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்