தொலைதூர நடைபயணம்
தொடர்ந்தே வரும் நிழல்
பாதங்களிடையே சிக்கி
மிதிப்பட்டு வந்தாலும்
இணைந்தே வர சலிப்பதில்லை..
உறங்காமல் உள்ளமெனும்
ஆழ்கடல் தன்னில் புதையுண்டு
நினைவுகள் எனும் அலைகள்
கரைத்தொடுகையில் அவை
வலிகள் தர மறப்பதில்லை..
என் துடுக்குத்தனங்களும்
என்னை விட்டு தூரம் செல்கையில்
வண்ணம் தீட்டமுடியாத
உடைந்த தூரிகை என்றெழும்
உணர்வை மட்டும் தவிர்க்கமுடியவில்லை..
விடைகள் கிடைக்கப்போவதில்லை
என்றறிந்தும் கிடைத்தாலும்
நான் ஏற்கத்தயாரில்லை..
என்பது புரிந்தும் எதற்கு
என்னை சிலந்திவலை பின்னலினுள்
சிக்கவைக்க எத்தனிக்கும்
நிர்பந்த போராட்டம் தேவையில்லையே..
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்