கிராமம் என்றால் இழிவில்லை!

0
2251
medium-poster4041-digital-painting-indian-village-on-fine-art-original-imaevkkzz3ttzyfk.jpeg

கிராமம் என்றால்
இழிவில்லை
இயற்கையின் இருப்பிடம்
ஊஞ்சல் கட்டி ஆடும்
தென்றலில்
ஒவ்வொரு முறையும்
உறைந்து போகலாம்
பச்சை வயலுடுத்தும்
பாவாடையின் கரையில்
பகல் இரவாக
படுத்துறங்கலாம்
நிலவைக்கட்டி இழுத்து
திண்ணையின் மடியில்
அமரச் செய்து
சோறூட்டலாம்
பஞ்சு மெத்தையின் சுகத்தை
மணலில்
உருண்டு புரண்டு
உடல் முழுதும் அனுபவிக்கலாம்
வகை வகையாக வர்ணம்
பூசத் தேவையில்லை
வானவில் அங்கேதான்
குடியிருக்கும்
வாரந்தோரும்
குளிப்பாட்டத் தேவையில்லை
வான்மழை அங்கேதான்
ஊற்றெடுக்கும்
வாழ்ந்து பார்ப்போம்
மூப்படைந்த கிராம தேவதை
திகட்டுவதில்லை என்பது
என் கணக்கு..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க